October 23, 2008

கல்லா மண்ணா

திருவான்மியூரில் இருந்து தாம்பரம் வந்து ஆறு மாசம் ஆக போகுது. வந்த புதிதில் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. இப்போது தான் தாம்பரம் பழகியிருக்கிறது. இரண்டு இடங்களுக்கும் நிறையவே வித்தியாசம். திருவான்மியூரில் நான் இருந்த ஏரியா(காமராஜ் நகர்) மிகவும் அமைதியாக இருக்கும். குழந்தைகள் விளையாடுவதை பார்ப்பது கொஞ்சம் அரிது. இங்கு தாம்பரத்தில் நேரெதிர். எப்போதும் கலகல என்று தான் இருக்கும். வாண்டூஸ் ஸ்கூல் இருக்கும்போதே பட்டையக் கிளப்புவாங்க. லீவு நாள்ல கேக்கவே வேணாம். சாயங்கலாம் இவர்களின் ஆட்டத்தை பார்ப்பது ஜூனியரின் ரெகுலர் வேலைகளில் ஒன்று. இவர்களைப் பார்க்கும்போது என் சிறு வயது நினைவுக்கு வரும்.


அப்பா வேலை காரணமாக நிறைய ஊர்களுக்கு சென்றிருந்தாலும் எங்கள் படிப்பு வீணாகக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். என் பள்ளிப்படிப்பை பெரும்பாலும் காஞ்சிபுரத்திலும் (UKG - 6), வாலாஜாப்பேட்டையிலுமே (6 - 12) முடித்தேன். காஞ்சியில் இருந்த நாட்களே பொன்னாட்கள் என்பேன். கலெக்டர் ஆபிஸ் பின்புறம் இருந்த ஹவுஸிங் போர்டில் தான் ஜாகை. என் வகுப்பு நண்பர்கள் வீடும் அங்கேயே தான். ஸ்கூல் விட்டு வந்ததும் எதையாவது சாப்பிட்டு விட்டு கிளம்பினால் குறைந்தது இரண்டு மணிநேரம் ஆட்டம் போட்டுவிட்டு தான் வீட்டுக்கு வருவேன். அப்போதே கேர்ள்ஸ் கேங்க் பாய்ஸ் கேங்க் என்று இருந்தது. ஆனாலும் கொஞ்ச நேரம் எல்லோரும் சேர்ந்து விளையாடுவதும் உண்டு.


ஸ்க்கிப்பிங், நொண்டி என நிறைய விளையாடினாலும் என் ஆல் டைம் பேவரிட்களில் ஒன்று கல்லா மண்ணா தான். இந்த விளையாட்டைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். நான் இருந்த தெரு இந்த விளையாட்டுக்கு அவ்வளவு அமைப்பாக இருக்காது என்றாலும் லோக்கல் ரூல்ஸ் வைத்து விளையாடுவோம். தெரு மண் ஏரியாவாகவும், அதன் இருபுறங்களும் கல் ஏரியாவாகவும் கருதப்படும். இந்த விளையாட்டு சாபூத்திரி போட்டே ஆரம்பிக்கப்படும். மோஸ்ட்லி முதலில் புடிக்க ஆரம்பிப்பவர் ஒரு வழியாகிவிடுவார். எல்லோரையும் அவுட் செய்வது என்பது ரொம்ப கஷ்டமான விஷயம். பிடிப்பவர் பெரும்பாலும் மண் ஏரியாவை தான் தேர்ந்தெடுப்பர். அதான் புத்திசாலித்தனமும். ரூல்ஸ் படி கல் ஏரியாவில் நிற்ப்பவர்கள் மண்ணைக் கடந்து எதிர்புறம் செல்ல வேண்டும். அப்படி மண்ணில் போகும்போது அவுட் ஆகிவிட்டால் அவர் தான் கேமை கண்டினியூ செய்ய வேண்டும். கேட்சரை வெறுப்பேத்த ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் வைப்பதும் நடக்கும். எனக்கு இன்னும் நினைவில் இருக்கும் ஆச்சரியமான விஷயம் நான் ஒரே ஒருமுறை தான் கேட்சர் ஆகியிருக்கிறேன். அதுவும் மழை வந்ததால் ஆட்டம் பாதியிலே க்ளோஸ். மற்றபடி கேட்சருக்கு தண்ணி காட்டிவிட்டு எஸ்கேப் ஆகும்போது கிடைக்கும் சுகமே தனி:)


இந்த கேம் ஏரியாவுக்கு ஏரியா வேறுபடும். காஞ்சி ஹவுஸிங் போர்டில் பின்பற்றிய சில ரூல்ஸ் இதோ.


1. பிளேயர்ஸ் யாரும் 5 நிமிடங்களுக்கு மேல் ஒரே ஏரியாவில் நிற்கக்கூடாது. அப்படி நின்றது நிரூபிக்கப்பட்டால்???!! அவர் தான் கேட்சராக வேண்டும்.
2. ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் ஆப்சனை இருமுறைக்குமேல் பயன்படுத்தக்கூடாது.
3. கேம் தொடங்கும்போது இருக்கும் தலை கணக்கை வைத்து மேக்ஸிமம் இத்தனை பேரை அவுட் செய்தால் போதும் என்று சிலசமயம் ரூல்ஸ் போடப்படும். (வானிலையைக் கருத்தில் கொண்டு)
4. அதே போல் ஆட்டம் தடைப்பட்டால் (மழையைத் தவிர்த்து) மறுநாளும் அதே நபர் தான் கேட்சராக கண்டினியூ பண்ணவேண்டும்.


அடுத்த பதிவும் விளையாட்டைப் பத்தி தான்.

2 comments:

Arun Kumar said...

அருமையான பதிவு. நானும் சிறு வயதில் என் அக்காவோடு இந்த விளையாட்டுகளை விளையாடி இருக்கேன்

ரிஷி (கடைசி பக்கம்) said...

one of my favourite in childhood

:-) tks for remembering that days